Saturday, June 1, 2024
Home » பழநி அருகே பயங்கரம் கணவனைக் கொன்று நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலனுடன் கைது-தாயும் கைது

பழநி அருகே பயங்கரம் கணவனைக் கொன்று நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலனுடன் கைது-தாயும் கைது

by kannappan

பழநி : பழநி அருகே ஆர்.ஜி.நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ்(43). இவரது மனைவி ஜகதா(33). ஜன.1ம் தேதி  சின்னக்கலையம்புத்தூர் – நெய்க்காரப்பட்டி சாலையில்  செல்வராஜ் இறந்து கிடந்தார். தனது கணவர் தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்றதாகவும், வீடு திரும்பவில்லை என்று பழநி தாலுகா போலீசில் ஜகதா புகாரளித்தார். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் செல்வராஜ் கழுத்தை நெரித்ததால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. டிஎஸ்பி சத்யராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை விசாரணையில் ஜகதா செல்போன் எண்ணை கொண்டு விசாரித்த போது, செல்வராஜை அவர் கொலை செய்தது தெரிய வந்தது. ஜகதாவிற்கும்,பித்தளைபட்டி  பைனானஸியர் ஜெகதீசுக்கும் (22) கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. செல்வராஜ் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஜெகதா, அவரது தாய் ராஜம்மாள் (55), கள்ளக்காதலன் ஜெகதீஸ் ஆகியோர் செல்வராஜை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் பழநி தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

You may also like

Leave a Comment

five × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi