தர்மபுரி, மார்ச் 12: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, தர்மபுரியில் மாவட்ட அளவிலான அறிவியல் வினாடி-வினா போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் கலந்துகொண்ட ஏரியூர் அடுத்த சிடுவம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி நேத்ரா முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மான்விழி ஆகியோர் பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.
பள்ளி மாணவிக்கு சிஇஓ பாராட்டு
previous post