Monday, May 13, 2024
Home » கோடையை சமாளிக்க பண்ணை குட்டைகள் அமைக்க ஆர்வம் காட்டும் விவசாயிகள்

கோடையை சமாளிக்க பண்ணை குட்டைகள் அமைக்க ஆர்வம் காட்டும் விவசாயிகள்

by Ranjith

பழநி, மார்ச் 12: பழநி பகுதியில் விவசாயத்தில் தென்னை சாகுபடி முக்கியமானதாக உள்ளது. கோடை காலங்களில் முறையான நீர் நிர்வாகத்தை கடைபிடிக்காவிட்டால் தென்னை மரங்களில் குரும்பை உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளிகளில் தண்ணீர் பாய்ச்சா விட்டால் மரங்கள் கருகும் சூழ்நிலையும் ஏற்படும்.

கோடை காலங்களில் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் குறைவதால் மரங்களுக்கு தேவையான தண்ணீர் பாய்ச்சுவதில் சிரமம் உண்டாகிறது. எனவே, கோடை காலம் துவங்கும் முன்பே தென்னந்தோப்புகளில் நீர் நிர்வாகத்திற்காக விவசாயிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

தென்னை மரங்களை சுற்றிலும் உள்ள வட்டப்பாத்தியில், ஓலைகளைக் கொண்டு நிரப்பு விடுகின்றனர். போர்வெல்களில் கிடைக்கும் குறைந்தளவு தண்ணீரை பண்ணை குட்டைகள் உருவாக்கி நிரப்பி வைத்து வருகின்றனர். குறிப்பிட்ட அளவு தண்ணீர் சேகரித்த பிறகு சொட்டு நீர் பாசனம் வாயிலாக தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர். இதற்காக விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பண்ணை குட்டைகள் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

eighteen + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi