பல்லடம்: பல்லடம் நகர மதிமுக நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பல்லடம் அருகேயுள்ள கொடுவாயில் தனியார் திருமண மண்டபத்தில் மதிமுக 5வது அமைப்பு தேர்தல் திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்டச்செயலாளர் புத்தரச்சல் மணி முன்னிலையில் மாநில தேர்தல் பணிக்குழு துணை ஆணையாளர் சேதுபதி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்லடம் நகர செயலாளராக வைகோ பாலு என்ற பாலசுப்ரமணியம், அவைத்தலைவராக ராசேசுகண்ணா, துணை செயலாளர்களாக துரை.ராஜ்குமார், ஜெகநாதன், நர்மதா இளங்கோவன், பொருளாளராக ஆறுச்சாமி, மாவட்ட பிரதிநிதிகளாக சாமிநாதன்,வே. ரகுராம், சரத்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.