காங்கயம்: காங்கயம் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்தநிலையில் பொதுமக்களில் தாகத்தை தணிக்கும் பல்வேறு இடங்களில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று காங்கயம் போலீஸ் நிலையம் சார்பில், போலீஸ் நிலையம் அருகே நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை காங்கயம் டிஎஸ்பி பார்த்திபன் தொடங்கி வைத்தார். பின்னர் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.