செங்கல்பட்டு: பத்ம விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அழைப்பு விடுத்துள்ளார்.இது குறிதது கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா அன்று, பத்ம விருதினை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தந்து, தன்னலமற்ற பொது சேவை, தனித்துவமான வேலை மற்றும் சாதனை போன்ற மேன்மை பொருந்திய பணிகளுக்காக ஒன்றிய அரசு பத்ம விருதுகள் வழங்குவதாக அறிவித்துள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வரும் 2023ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்விருதுகளுக்கான விண்ணப்பங்களை www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் 15.9.2022ம் தேதிக்குள் விண்ணப்பக்கலாம்….