சென்னை: கமல்ஹாசன் தனது தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். சென்னையிலுள்ள 123வது வார்டில் (மயிலாப்பூர்) போட்டியிடும் பெண் வேட்பாளர் மாலாவை ஆதரித்து, விசாலாட்சி தோட்டம் பகுதியில் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். பிறகு மாலையில் ஆழ்வார்பேட்டை மநீம கட்சி அலுவலகத்தில் நடந்த சென்னை மாநகராட்சி வார்டு வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நம்மிடம் இருப்பதும், எதிரிகளிடம் இல்லாததும் நேர்மைதான். இப்போது உங்களை கிண்டல் செய்வார்கள், ரவுடிகளை கொண்டு மிரட்டுவார்கள். துணிந்து செல்லுங்கள். நாளை உங்கள் முன் அவர்கள் தலைகுனிந்து நிற்பார்கள். நான் அரசியலுக்கு வந்திருப்பது பதவிக்காக அல்ல. தமிழ் நாட்டு மக்களுக்காக. கலைஞன் என்கிற பெரும் பதவியை ஏற்கனவே எனக்கு கொடுத்துவிட்டீர்கள். தேவைக்கு அதிகமாக பணத்தையும், புகழையும் கொடுத்துவிட்டீர்கள். என்னை பார்ட் டைம் அரசியல்வாதி என்கிறார்கள். வேறு வேலை தெரியாதவர்கள் அப்படி சொல்கிறார்கள். நீங்கள் உங்கள் வீட்டு வேலைகளை செய்துகொண்டு, பார்ட் டைம் அரசியல் செய்யுங்கள். ஃபுல் டைம் அரசியலும் மாறிவிடும்….