Thursday, May 16, 2024
Home » பண்ருட்டியில் முன்விரோத தகராறில் தாக்குதல் : 2 பெண்கள் உள்பட 4 பேர் காயம்

பண்ருட்டியில் முன்விரோத தகராறில் தாக்குதல் : 2 பெண்கள் உள்பட 4 பேர் காயம்

by Ranjith

 

பண்ருட்டி, பிப். 12: பண்ருட்டியில் வாடகை கார் ஓட்டுநர்களுக்குள் நடந்த தகராறில் 2 பெண்கள் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.பண்ருட்டி மணி நகரை சேர்ந்த ராஜநீதி (36) என்பவரும், அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜதுரை என்பவரும் கார் வைத்துக்கொண்டு வாடகைக்கு ஓட்டி வருகின்றனர் வாடகைக்கு செல்வதில் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்த நிலையில், நேற்று ராஜநீதி தன் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது, ராஜதுரை மற்றும் அடையாளம் தெரிந்த இரண்டு பேர்,

நீ என்ன பெரிய ஆளா என்று அசிங்கமாக திட்டி கீழே கிடந்த கருங்கல்லால் ராஜநீதியை தலையில் அடித்தனர், தடுக்க வந்த ராஜநீதியின் மனைவி திவ்யாவையும், தாய் சாந்தியையும் அசிங்கமா திட்டி அடித்து மிரட்டியுள்ளனர். இதை தட்டி கேட்ட ராஜநீதி உறவினர் இளங்கோ(32) என்பவரும் தாக்கப்பட்டார். இது குறித்து ராஜநீதி கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜதுரை மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் விலாசம் தெரியாத இரண்டு நபர்கள் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

5 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi