ஒட்டன்சத்திரம், மார்ச் 26: ஒட்டன்சத்திரம் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்தவர் சடையப்பன்(54). இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், மதன் என்ற மகனும். கிருத்திகா என்ற மகளும் உள்ளனர். சடையப்பன் மேற்கு வங்காளத்தில் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார. இந்நிலையில் விபத்தில் சிக்கிய அவர், அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 23ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டுமென, மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதன்படி கொல்கத்தாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சடையப்பனின் உடல் ஓடைப்பட்டியில் ராணுவ மரியாதையுடன் ேநற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. சடைப்பனின் உடலுக்கு, வட்டாட்சியர் சசி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் துணை வட்டாட்சியர் கனகராஜ், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகையப்பன், சமூக ஆர்வலர் கேசவன், வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.