கிருஷ்ணகிரி, மார்ச் 24: வேப்பனஹள்ளி அருகே நடுவனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அம்சகிரி(44), கட்டிட மேஸ்திரி. இவர் அதே பகுதியில் உள்ள மேல்கொண்டப்பநாயனப்பள்ளி பகுதியில், கோவிந்தராஜ் என்பவரது வீட்டை கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக, 2வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த குருபரப்பள்ளி போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.