ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன் ஏ.டி.எம். மையங்கள் உள்ள பகுதியில் நேற்று மதியம் சாக்கடையில் பெண் சிசு தொப்புள் கொடியுடன் உயிருடன் கிடந்தது. இதையறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 108 ஆம்புலன்சு மூலம் பெண் குழந்தையை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அந்த குழந்தை பிறந்து 2 மணி நேரம் இருக்கும். தொப்புள் கொடி கட் செய்யும் முன் நாடி துடிப்பு மிக மெதுவாக இயங்கியது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘சாக்கடையில் மீட்கப்பட்ட குழந்தை பிறந்து 2 மணி நேரம்தான் இருக்கும். தொப்புள் கொடியை துண்டித்தவுடன் நாடி துடிப்பு சற்று சீரானது. ஈரோடு அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது’’ என்றனர். பெற்ற குழந்தையை பிறந்த 2 மணி நேரத்தில் சாக்கடையில் தூக்கி வீசி ஏறிந்த கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என்பது குறித்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்….