Monday, May 27, 2024
Home » நொளம்பூர் அருகே முட்புதரில் இளம்பெண் எரித்து கொலை: போலீசார் விசாரணை

நொளம்பூர் அருகே முட்புதரில் இளம்பெண் எரித்து கொலை: போலீசார் விசாரணை

by kannappan

அண்ணாநகர்: மதுரவாயல் லட்சுமி நகர், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் முருகன் (37), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரேவதி (34). தம்பதிக்கு, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நேற்று மதியம் 12 மணியளவில், முருகன் தனது மனைவியை காணவில்லை என்று மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், ரேவதியை தேடி வந்தனர். இந்நிலையில், நொளம்பூர் சர்வீஸ் சாலையில் உள்ள முட்புதரில் கைகள் கட்டப்பட்டு, முழுவதும் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் கிடப்பதை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக நொளம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சந்தேகத்தின் பேரில், முருகனுக்கு தகவல் கொடுத்து, அவரை அங்கு வரவழைத்தனர்.அதன்படி அங்கு விரைந்து வந்த முருகன், அந்த இடத்தில் கிடந்த ரேவதியின் ஆதார் அட்டையை வைத்து, கொலை செய்யப்பட்டது தனது மனைவி ரேவதி என அடையாளம் காட்டினார். இதையடுத்து, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து, ரேவதி எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலை செய்தது யார் என விசாரணை செய்து வருகின்றனர்….

You may also like

Leave a Comment

18 + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi