மதுரை, ஜூலை 8: மதுரை மாவட்ட உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக ஜெகதீசன் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து அவர் தலைமையில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ முத்துராஜா மற்றும் போலீசாருடன் சென்று சிந்தாமணி, அனுப்பானடி, பனையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நெல் அரைக்கும் மில்களில் அதிரடி சோதனை நடத்தினார். இந்த சோதனையின்போது, சிசிடிவி கேமிரா இல்லாத மில்லில் அவற்றை பொருத்த வேண்டும். அரிசியில் கலப்படம் செய்வது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால், சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தார்.