Sunday, June 16, 2024
Home » நெல்லையில் பயங்கரம்; கள்ளக்காதல் விவகாரத்தில் நர்ஸ் கொலை: கணவர், மருமகன் கைது

நெல்லையில் பயங்கரம்; கள்ளக்காதல் விவகாரத்தில் நர்ஸ் கொலை: கணவர், மருமகன் கைது

by kannappan

நாங்குநேரி: கள்ளக்காதல் விவகாரத்தில் நெல்லை அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த நர்ஸ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவன், மருமகனை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே மூலைக்கரைப்பட்டி பொட்டல் தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி ராஜலட்சுமி (45), நெல்லை அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களது மகள் அனிதா (23). அனிதாவின் கணவர் அபிமன்யு (33). தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மூலைக்கரைப்பட்டி அடுத்த கல்லத்தியில் வசித்து வந்தனர். இதனிடையே அனிதாவுக்கு திருமணத்திற்கு முன்னர் மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை மறைத்து உறவினரான அபிமன்யுக்கு திருமணம் முடித்து கொடுத்துள்ளனர். திருமணமாகி இரு குழந்தைகள் பெற்ற பிறகும் அனிதாவுக்கு அந்த வாலிபருடன் தொடர்பு நீடித்தது. இதையறிந்த அபிமன்யு மனைவியை கண்டித்த நிலையில் அனிதா கணவர், குழந்தைகளைவிட்டு விட்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதேபோல் நர்சான ராஜலட்சுமிக்கும் வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருந்துவந்தது. இதை அவரது கணவர் வேலாயுதம் கண்டித்தபோதும் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் மூலைக்கரைப்பட்டி சென்ற அபிமன்யு மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால், அவர் வர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் ராஜலட்சுமி, மருமகனை தாக்கியுள்ளார். இதுகுறித்து அபிமன்யு கடந்த 15ம்தேதி நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில், மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வரமறுப்பதாகவும், மாமியாரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மூலைக்கரைப்பட்டிக்கு மீண்டும் சென்ற அபிமன்யு, மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்தபோது தகராறு ஏற்பட்டது. இதில் மாமியார் ராஜலட்சுமி, மருமகனை அவதூறாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த அபிமன்யு, தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் ராஜலட்சுமியை சரமாரியாக வெட்டினார். அப்போது மாமனார் வேலாயுதமும் சேர்ந்து வெட்டினாராம். அப்போது இதைத் தடுத்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த அன்பழகன்(30) என்பவருக்கும் தலையில் வெட்டு விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜலட்சுமி ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் படுகாயமடைந்த அன்பழகனுக்கு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்த பிறகு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இதுதொடர்பாக வழக்குப் பதிந்த மூலைக்கரைப்பட்டி போலீசார், அபிமன்யு, வேலாயுதம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் நர்ஸ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

You may also like

Leave a Comment

four × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi