நெல்லை, ஆக. 10: நெல்லை சிந்துபூந்துறை கீழதெருவை சேர்ந்தவர் பாஸ்கர்(23). இவரும், இவரது 17 வயது சகோதரரும் பாளையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற பாளை காவல் நிலைய ஏட்டு பெக்கின் சந்தேகத்திற்கு இடமாக நின்ற இருவரையும் அழைத்து விசாரித்துள்ளார். இருவரும் ஒரு பொட்டலத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த பாளை போலீசார், அவரது வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர். அங்கு ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போ லீசார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.