நீடாமங்கலம்,ஏப்.25: நீடாமங்கலம் திரவுபதியம்மன் கோயில் 44வது தீமிதி திருவிழா நேற்றிரவு நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புகழ் பெற்ற இக்கோயிலில் தீமிதி பிரம்மோத்ஸவம் அதிவிமரிசையாக நடைபெற்று வருகிறது.இவ்வாண்டும் தீமிதி பிரம்மோத்ஸவம் கடந்த 17 ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.நேற்றிரவு தீமிதி திருவிழா நடைபெற்றது.இதனைமுன்னிட்டு காலையில் கூந்தல் முடிதல் நிகழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள்,அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
மாலையில் திரெளபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிவலமாக யமுனாம்பாள் தோட்டத்தை வந்தடைய அங்கு தீமிதி நடைபெற்றது.பக்தர்கள் தீமிதித்து அம்மனை வழிபட்டனர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வரும் 28 ம்தேதிவரை இக்கோயில் திருவிழா நடைபெறுகிறது.ஜெயங்கொண்டம் சிட்டிபாபு பாகவதர் குழுவினரால் நாள்தோறும் பாராத கதை நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜசேகரன் மற்றும் அறங்காவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.