நெல்லை, மார்ச் 19: நெல்லை டவுன் தடிவீரன் கோயில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (32). இவர் மீது இரண்டு அடிதடி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதுதொடர்பாக நீதிமன்றத்தில் கிருஷ்ணகுமார் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. அதன் அடிப்படையில் டவுண் போலீசார் அவரை தேடிவந்தனர். இந்நிலையில் கிருஷ்ணகுமார் தடிவீரன் கோயில் தெரு அருகே நிற்பதாக கிடைத்த தகவலையடுத்து நேற்று டவுன் போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவர் கைது
previous post