வருசநாடு, நவ.20: கடமலைக்குண்டு கிராமத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கடமலைக்குண்டு கிராமத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திமுகவினர் வீடு வீடாக சென்று கையெழுத்து இயக்கத்தை பதிவு செய்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன், தெற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி, தேனி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செஞ்சுரி செல்வம், துணை அமைப்பாளர் பிரபாகரன், மாவட்ட வர்த்தக அணி குறிச்சி மாடசாமி, ஒன்றிய கவுன்சிலர் உமாமகேஸ்வரி வேல்முருகன், இளைஞர் அணி வைகைபிரபாகரன், ஸ்டீபன், தொழில் நுட்ப அணி முருகன் உள்ளிட்ட அனைத்து திமுக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.