நீடாமங்கலம், ஆக. 27: நீடாமங்கலம் அருகே லாரி மோதி கூலி தொழிலாளி பலியானார். நீடாமங்கலம் அருகே ஒரத்தூர் அம்பலகாரத்தெருவில் வசித்தவர் சண்முகம் (58). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை ஒரத்தூரிலிருந்து, நீடாமங்கலம் நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோரையாற்று பாலத்தில் பின்னால் வந்த லாரியில் சிக்கி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். தகவலறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.