நிலக்கோட்டை, ஜூன் 9: நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம வளர்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) விஜயசந்திரிகா தலைமை வகித்தார். கூட்டத்தில் நிலக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட 23 கிராம ஊராட்சிகளில் கிராம வளர்ச்சிக்கு நடந்து வரும் பணிகள் மற்றும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம ஊராட்சி நிர்வாகங்களில் மக்கள் நல பணியாளர்களுக்கு வழங்கப்படும் பணிகள், அவர்களின் கடமைகள் குறித்து அறிக்கை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர், கிராமங்களில் மக்கள் நலன் மற்றும் அடிப்படை தேவைகளுக்காக உடனுக்குடன் தொடர்பு கொள்ளும் வகையில் மக்களோடு மக்களாக ஒன்றி இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுவித்தார்.