கொடைக்கானல், ஜூன் 9: கொடைக்கானல் மேல்மலை போலூரை சேர்ந்தவர் குருசாமி (67). பலசரக்கு கடைக்காரர். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்து விட்டு தனது மகன் சிவராஜாவுடன் டூவீலரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் கிளாவரையை சேர்ந்த தர்மதுரை ஓட்டி வந்த கார், இவர்களது டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த குருசாமியை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் ஜிஹெச்சிற்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மகன் சிவராஜா அளித்த புகாரில் கொடைக்கானல் ேபாலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.