Tuesday, May 21, 2024
Home » நாளை, நாளை மறுநாள் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாளை, நாளை மறுநாள் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

by Karthik Yash

விழுப்புரம், ஏப். 11: வார இறுதி நாளையொட்டி, சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வார இறுதி நாளான, நாளை மற்றும் நாளை மறுநாள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், சிதம்பரம், திருவண்ணாமலை, போளூர் ஆகிய ஊர்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பொதுமக்கள் வசதிக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத்தின் சார்பில், ஏப்ரல் 11, 12 ஆகிய தேதிகளில் தலா 150 வீதம் இரு நாள்களுக்கு 300 சிறப்புப் பேருந்துகள் இந்த வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளன. எனவே சிறப்பு பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் அரசு போக்குவரத்துக் கழக இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பயணிகளின் கூட்டம் குறையும் வரை தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கவும், பேருந்துகளின் வேகத்தை கண்காணித்திடவும் தேவையான அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர், என கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

five × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi