நாசரேத், மார்ச் 28: நாசரேத் அருகே தோல் நோயால் பாதிக்கப்பட்டு வந்த முதியவர் வீட்டில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து ெகாண்டார். நாசரேத் அருகே உள்ள வெள்ளரிக்காயூரணியை சேர்ந்தவர் ஆறுமுகம் (84). இவரது மனைவி. சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ஆறுமுகம், மகன் கணேசன் பராமரிப்பில் இருந்து வந்தார்.
மேலும் தோல் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த ஆறுமுகம், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கணேசன் நாசரேத் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வைகுண்டதாஸ் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜீன்குமார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.