தூத்துக்குடி, மார்ச் 28: தூத்துக்குடி சுனாமி காலனி, கோமஸ்புரத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சந்தானராஜ்(25). இவரது நண்பர் சுடலைராஜ். நேற்று முன்தினம் இவர்கள், சுடலைராஜின் நண்பர்கள் ரமேஷ், மாரிச்செல்வம், பிளேட், மந்திரம் ஆகிய 4 பேருடன் சேர்ந்து பூப்பாண்டியாபுரம் டாஸ்மாக் கடையில் மது குடித்துள்ளனர். அப்போது இவர்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சுடலைராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து சந்தானராஜை மதுபாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சந்தானராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் தாள முத்துநகர் எஸ்ஐ ராஜாமணி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.