Wednesday, June 5, 2024
Home » நாகர்கோவிலில் ரவுடியுடன் தகராறு கத்திக்குத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த பெண் பலி கொலை வழக்காக மாறியது

நாகர்கோவிலில் ரவுடியுடன் தகராறு கத்திக்குத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த பெண் பலி கொலை வழக்காக மாறியது

by Karthik Yash

நாகர்கோவில், டிச.28: நாகர்கோவிலில் ரவுடி கத்தியால் குத்தியதில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் மருங்கூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அகிலேஷ் என்ற அஜய் என்ற அப்துல்லா (34). ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் அடி,தடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு பட்டியலிலும் இவர் உள்ளார். அகிலேசுடன் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த லைசா (50) என்ற பெண் தொடர்பில் இருந்தார். கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. லைசா, ஏற்கனவே திருமணமானவர். குடும்பத்தை பிரிந்து அகிலேசுடன் இருந்துள்ளார்.

இந்த நிலையில் அகிலேசின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் இனி உன்னுடன் இருக்க மாட்ேடன் என கூறி நாகர்கோவிலில் உள்ள மகள் வீட்டுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் லைசா வந்து தங்கினார். ஆனால் அகிலேஷ் விடாமல் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார். கடந்த 22ம் தேதி மதியமும் நாகர்கோவில் வந்து ைலசாவை சந்தித்து தன்னுடன் வரும்படி அழைத்தார். இதற்கு, லைசா மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அகிலேஷ், என்னுடன் வாழ வர மாட்டாயா? என கூறி லைசாவின் கழுத்தை பிடித்து நெரித்து, வயிற்றில் சரமாரியாக கத்தியால் குத்தினார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பினார். படுகாயம் அடைந்த லைசாவை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

வடசேரி இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன், எஸ்.ஐ. மணிகண்டன் ஆகியோர் விசாரணை நடத்தி, அகிலேஷ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த லைசா நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. வடசேரி போலீசார் லைசாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

You may also like

Leave a Comment

15 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi