Friday, May 3, 2024
Home » நவல்பட்டு வாக்குசாவடியில் வாக்கு இயந்திரங்களை வரிசை மாற்றி வைத்ததால் பரபரப்பு

நவல்பட்டு வாக்குசாவடியில் வாக்கு இயந்திரங்களை வரிசை மாற்றி வைத்ததால் பரபரப்பு

by Ranjith

 

திருவெறும்பூர், ஏப்.20: திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு 213 வது வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரத்தை மாற்றி வைத்ததால் அங்கு அரசியல் கட்சி பிரதிநிதிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட நவல்பட்டு ஊராட்சி 213 வது வாக்குச்சாவடியில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அலுவலர்கள் வரிசைமாற்றி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் வாக்காளர்கள் வாக்கு செலுத்துவதில் குளறுபடி ஏற்படுவதாக அரசியல் கட்சியினரிடம் கூறியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திமுக மற்றும் அதிமுகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதுபற்றி தகவல் கிடைத்ததம் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் வந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சரியான முறையில் வைத்ததோடு இரு தரப்பினரையும் சமரசம் கூறிஅனுப்பினர். இதனால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தால் நவல்பட்டு 213வது வாக்குச்சாவடியில் சுமார் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

seventeen − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi