மத
ஈரோடு, ஏப்.21: பவானி, காலிங்கராயன்பாளையம், சக்திநகர் 2வது வீதியை சேர்ந்தவர் செங்கோட்டையன் மனைவி சரஸ்வதி (70). இவரது மகன் குமாரசாமி. இவர், பவானியில் வேளாண் துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகின்றார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு குமாரசாமிக்கு மூளையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றார். தனது மகனின் நிலையை கண்டு மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்த தாய் சரஸ்வதி நேற்றுமுன்தினம் அதிகாலை தான் அணிந்திருந்த நகைகளை அனைத்தையும், கழற்றி வைத்துவிட்டு அருகில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.