நத்தம், மார்ச் 15: நத்தம் அருகே அம்மாபட்டியை சேர்ந்தவர் துரைமுருகன் (52). கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர் குடும்பத்தில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் இவரது மனைவி காவேரி, அவரை கண்டித்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த துரை முருகன் சம்பவத்தன்று வீட்டின் அருகிலிருந்த உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.