மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் வள்ளியம்மை தெருவை சேர்ந்தவர் நூருல் ஹாலிக் (58). இவர் மயிலாடுதுறை காந்திஜி சாலையில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று காலை 9 மணி அளவில் கடையின் மாடியில் உள்ள மின்விசிறியில் நூருல் ஹாலிக் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இறந்து போன நூருல் ஹாலிக் நகை திருடியதாகவும், அதனால் கடையின் உரிமையாளர் நூருல் ஹாலிக்கை திட்டியதாகவும், அதனால் மனம் உடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்தது. இந்தசம்பவம் தொடர்பாக நூருல் ஹாலிக் மனைவி பரிதாக்கனி (52) கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.