Thursday, May 9, 2024
Home » தொழிலதிபர் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை பள்ளிகொண்டாவில்

தொழிலதிபர் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை பள்ளிகொண்டாவில்

by Karthik Yash

பள்ளிகொண்டா, மார்ச் 14: பள்ளிகொண்டாவில் தொழிலதிபர், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும், அவரது கணவரும் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா குடியாத்தம் சாலையில் வசிப்பவர் கமலக்கண்ணன்(77). இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான காம்ப்ளக்சில் சூப்பர் மார்க்கெட், ஸ்டேஷ்னரி பொருட்கள் விற்பனை, மெடிக்கல் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி விஜியலட்சுமி(70). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் 2 மகன்கள், மருமகள்கள் என கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மேலும், கடை வியாபாரங்களையும் கமலக்கண்ணன், மனைவி, மகன், மருகள்கள் என தனித்தனியாக பிரித்து ஒற்றுமையுடன் வியாபாரம் செய்து வந்தனர்.

விஜிய லட்சுமிக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதித்து வயிற்றில் ஆபரேஷன் நடந்ததாக தெரிகிறது. ஆனால் அதன் பின்னரும் அடிக்கடி வலி வந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று மாலை 3 மணியளவில் கமலக்கண்ணன் அவரது மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். மற்ற அனைவரும் கடை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது, உடல் நிலை பாதிப்பு குறித்து கணவன்- மனைவி நீண்ட நேரம் பேசினார்களாம். இதில் 2 பேரும் மனமுடைந்து இனி நாம் குடும்பத்திற்கு பாரமாக இருக்கக் கூடாது. வாழ்க்கையை துறந்து விடலாம் என முடிவெடுத்து இருவரும் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளனர். அந்த நேரத்தில் அவர்களின் மருமகள் வீட்டிற்கு வந்த நிலையில், இருவரும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கடையில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து அவரது மகன் சீனிவாசன் அவர்களுக்கு சொந்தமான காரிலே இருவரையும் மீட்டு புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் விஜியலட்சுமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கமலக்கண்ணன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 50 வருடத்திற்கும் மேலாக பள்ளிகொண்டா பகுதியில் கடைகள் நடத்தி வந்த தொழிலதிபர் அவரது மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

6 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi