சென்னை: தொழிலதிபர் பாண்டிராஜ் என்பவரை கணபதி சுப்பிரமணியம் என்பவர் கடத்த முயன்றதாக சி.பி.ஐ. வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. முன்னாள் ஐ.ஜி. சிவனாண்டியின் நண்பரான கணபதி சுப்பிரமணியம் தன்னை கடத்த முயன்றதாக பாண்டிராஜ் புகார் அளித்துள்ளார். பாண்டிராஜ் புகார் குறித்து விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் புகாரில் முகாந்திரம் இல்லை என்று நிராகரித்தது. சி.பி.சி.ஐ.டி. போலீஸ் புகாரை நிராகரித்ததை அடுத்து ஐகோர்ட்டை அணுகி சி.பி.ஐ. விசாரணைக்காக உத்தரவை பெற்றார் பாண்டியராஜ். …