தொண்டி, மே 23: தொண்டியை அடுத்த கடலோர கிராமமான நம்புதாளை மேற்கு பள்ளி வளாகத்தில் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி தலைமையில் அஹமது ஆயிசா தொழிற்பயிற்சிப் பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டது. திருவாடானை டிஎஸ்பி நிரேஷ் பேசுகையில், இளைஞர்களை தீய பழக்கத்திலிருந்து விடுபடும் வகையில் கல்வியுடன் ஒழுக்க கல்வியும் வழங்குவதை பாராட்டுகிறோம் என்றார்.
திருவாடானை யூனியன் சேர்மன் முகம்மது முக்தார், பாரூக், சித்தி விநாயகம், முத்துச்சாமி, தாளாளர் செய்யது முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு பள்ளி ஜமாத் தலைவர் சாகுல் ஹமீது வரவேற்றார். கிழக்கு தெரு ஜமாத் தலைவர் சேகுதாவுது மரைக்காயர், ஊராட்சி தலைவர் பாண்டிச் செல்வி ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் சுமதி முத்துராக்கு, தொண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதி ஜமாத்தார்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.