உடுமலை, ஏப். 16: ராகுல்காந்தியின் எம்பி பதவியை பறித்து ஜனநாயக படுகொலை செய்த மத்திய அரசை கண்டித்து, திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் உடுமலையில் நேற்று மாலை நடந்தது. மாவட்டத்தலைவர் கே. தென்னரசு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ காளித்து கலந்து கொண்டார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ், ஜனார்த்தனன், கிட்டுசாமி, கண்ணுசாமி, நகரத்தலைவர் கோ. ரவி, மாவட்டத் துணைத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத்தலைவர்கள் கனகராஜ், செல்வக்குமார், வெங்கடேஷ், சின்னச்சாமி, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ரயில் மறியல் செய்ய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.