விருதுநகர், ஜூன் 16: கோவா மாநிலம் பனாஜி பென்டேம் மபுஷா உள்விளையாட்டு அரங்கில் பாரம்பரிய சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் சார்பில் 21வது தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் விருதுநகர் நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் 6 மாணவர்கள் பங்கேற்றனர்.
14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் ஹரிபாலசக்தி தங்கப்பதக்கம், 10 வயதிற்கு உட்பட்டோர் தனித்திறமை கட்டா பிரிவில் முகிலேஷ் வெண்கலப்பதக்கம், 12 வயதிற்கு உட்பட்ட தனித்திறமை கட்டா பிரிவில் கேசவன் வெண்கலப்பதக்கம், 15 வயதிற்கு உட்பட்டோருக்கான தனித்திறமை கட்டா பிரிவில் நரேன் கார்த்திக் வெண்கலப்பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி செயலாளர் வெர்ஜின் இனிகோ வாழ்த்தி பாராட்டுகளை தெரிவித்தார்.