ொன்னேரி: பொன்னேரி அருகே பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த். கூலித்தொழிலாளி. இவரது இளைய மகன் சஞ்ஜீஸ்வரன், இவனுக்கு மூன்றரை வயதாகிறது. இந்நிலையில், நேற்று காலை பெற்றோர் கவனிக்காத நேரத்தில் வீட்டிலிருந்த தேங்காயை குழந்தை சாப்பிட்டுள்ளது. அப்போது தேங்காய் துண்டு திடீரென குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதனால், குழந்தைக்கு மூச்சுத்திணறியது. அவன் துடிதுடிப்பதை கண்ட உறவினர்கள் மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தேங்காய் துண்டு சிக்கி மூச்சுத் திணறி குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. …
தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி மூன்று வயது குழந்தை பரிதாப சாவு
previous post