Thursday, May 16, 2024
Home » (தி.மலை) சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 111.80 அடியாக நீர்மட்டம் குறைந்தது 3 மாவட்ட விவசாய பாசனத்துக்காக

(தி.மலை) சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 111.80 அடியாக நீர்மட்டம் குறைந்தது 3 மாவட்ட விவசாய பாசனத்துக்காக

by Francis

 

தண்டராம்பட்டு, பிப். 12: திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்ட விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 111.80 அடியாக குறைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும். பொன்விழா கண்ட இந்த அணை 119 அடி உயரம் கொண்டது. பரவலாக மழை பெய்தால் சாத்தனூர் அணை 118 அடி நீர்மட்டம் உயரும். இந்நிலையில், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் கடந்த மாத 11ம் தேதி சாத்தனூர் அணையில் இருந்து வலது, இடது தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 530 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதனால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் நேற்று 111.80 அடியாக குறைந்துள்ளது. நேற்று விடுமுறை, முகூர்த்த தினம் என்பதால் குறைந்த சாத்தனூர் அணைக்கு அளவே சுற்றுலா பயணிகள் வந்தனர். மேலும், சாத்தனூர் அணையில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் விவசாய பாசனத்திற்காக கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீரில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர். சாத்தனூர் அணையில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் விவசாய பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீரில் குளித்து மகிழும் பொதுமக்கள்.

You may also like

Leave a Comment

one + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi