திருவையாறு, நவ.17: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த பள்ளியக்ரஹாரத்தைச் சேர்ந்த குணசீலன் மனைவி கயல்விழி (29). இவர் 108 ஆம்புலன்ஸில் முதலுதவி நுட்புநராகப் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மணக்கரம்பை இ சேவை மைய அலுவலகத்தில் 108 ஆம்புலன்சில் அலுவலக செல்போன் மற்றும் அவர் பயன்படுத்தும் செல்போன் இரண்டையும் வண்டியில் சார்ஜர் போட்டு விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 2 செல் போன்களையும் திருடி சென்று விட்டனர். இது குறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் கயல்விழி புகார் செய்தார். புகாரின்பேரில் நடுக்காகவேரி சப்இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் புகார் மனுவை பெற்றுக்கொண்டு செல்போன் திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.