Sunday, May 19, 2024
Home » திருவாரூர் அருகே பயங்கரம் இந்திய கம்யூ. நிர்வாகி வெட்டி படுகொலை: ஆதரவாளர்கள் மறியல்; டூ வீலருக்கு தீ வைப்பு

திருவாரூர் அருகே பயங்கரம் இந்திய கம்யூ. நிர்வாகி வெட்டி படுகொலை: ஆதரவாளர்கள் மறியல்; டூ வீலருக்கு தீ வைப்பு

by kannappan

நீடாமங்கலம்: திருவாரூர் அருகே இந்திய கம்யூ. நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா ஒளிமதி கிராமத்தில் வசித்து வந்தவர் நடேச தமிழார்வன் (55). இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர். இவரது மனைவி பழனியம்மாள். நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர். இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில் நேற்று மதியம் 3.30 மணி அளவில் நடேச தமிழார்வன், கட்சி அலுவலகத்தில் இருந்து காரில் வீட்டிற்கு புறப்பட்டார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே எதிரே வந்த மர்ம நபர்கள் காரை வழிமறித்து அவரை கீழே இறக்கினர். பின்னர் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். இதில்  நடேசதமிழார்வன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த தஉறவினர்கள் மற்றும் கட்சியினர் திரண்டு குற்றவாளிகளை கைது செய்ய கோரி சடலத்துடன் பெரியார் சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்ற அரசு பஸ், லாரி கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தினர். அங்கு நின்ற பைக்கையும் தீ வைத்து கொளுத்தினர். இதையடுத்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன.  தகவல் அறிந்து எஸ்.பி விஜயகுமார் அங்கு வந்து, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், நாகை எம்பி செல்வராசு ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக அவர் உறுதி அளித்ததையடுத்து மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக திருவாரூர் – நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்….

You may also like

Leave a Comment

ten − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi