ஸ்பிக்நகர், செப். 16: தூத்துக்குடி புதிய துறைமுகம் பகுதியை சேர்ந்தவர் சூடாமணி(50). இவரது சகோதரியின் மகன் செண்பகராஜ் என்பவருக்கு முத்தையாபுரத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த முத்தையாபுரம் குமாரசாமி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன்(42) என்பவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து சென்ற அவர் மணமகனின் வீட்டிற்கு சென்று அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் எஸ்ஐ அல்லிஅரசன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி மணிகண்டனை கைது செய்தார்.
திருமண மண்டபத்தில் தகராறு செய்தவர் கைது
previous post