Friday, May 17, 2024
Home » திருநங்கைகள், நரிக்குறவர் சமூகத்தினருக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் சீர்வரிசை தட்டுடன் கலெக்டர் வழங்கினார் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி

திருநங்கைகள், நரிக்குறவர் சமூகத்தினருக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் சீர்வரிசை தட்டுடன் கலெக்டர் வழங்கினார் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி

by Karthik Yash

திருவண்ணாமலை, ஏப்.5: திருவண்ணாமலையில் 100 சதவீதம் வாக்களிக்க வலியறுத்தி, திருநங்கைகள் மற்றும் நரிக்குறவர் சமூக மக்களுக்கு சீர்வரிசை தட்டில் தேர்தல் அழைப்பிதழ் அளித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திருவண்ணாமலை மாவட்டத்தில், 100 சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடமும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, திருவண்ணாமலை மாவட்டம் 100 சதவீத வாக்களித்த மாவட்டம் எனும் சிறப்பை பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். அதன்படி, திருவண்ணாமலை பச்சையம்மன் கோயில் தெருவில், திருநங்கைகளிடம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, சீர்வரிசை தட்டில், விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்ற தேர்தல் அழைப்பிதழை திருநங்கைகளிடம் அளித்து, தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில், நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, நாம் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார்.அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை அடுத்த கணத்தம்பூண்டி கிராமத்தில், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் மூத்த வாக்காளர்களிடம் சீர்வரிசையுடன் தேர்தல் அழைப்பிதழ், துண்டு பிரசுரங்கள் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த முதல்முறை வாக்காளர்களுக்கு, மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு எவ்வாறு வாக்களிப்பது என செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. அப்போது, மாதிரி வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்ட கலெக்டர், தவறாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்ெகாண்டார். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை அடுத்த நல்லவன் பாளையம் கிராமத்தில் இருளர் சமூக மக்களிடம் 100 சதவீதம் வாக்களிப்தன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். நிகழ்ச்சியில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மந்தாகினி, நகராட்சி ஆணையாளர் தட்சணாமூர்த்தி, தாசில்தார் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

twenty − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi