திருச்சி, நவ.24: கணித திறனறித் தேர்வு திருச்சி அண்ணா அறிவியல் மையம் கோளரங்கத்தில் டிச.3ம் தேதி நடைபெற உள்ளது. அண்ணா அறிவியல் மையம் கோளரங்கத்தில் மாணவச் சமுதாயம் பயன்பெற தொடர்ந்து அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிது, அதில் கணிதத் திறனறித் தேர்வை பள்ளி மாணவா்களுக்கு வரும் டிச.3ம் தேதி காலை 11 மணிக்கு கோளரங்க வளாகத்தில் நடத்தப்பட உள்ளது, இதில் 5,6,7 மற்றும் 8 ம் வகுப்பு பயிலும் அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம், நுழைவு கட்டணமாக ₹.100. டிச.1 ம் தேதிக்குள் பதிவு செய்யவும், வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும், மலும் விவரங்களுக்கு 0431-2332190,2331921 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திட்ட இயக்குநர் (பொ) அகிலன் தெரிவித்துள்ளார்.