நாகப்பட்டினம்,செப்.28: புதுடெல்லி சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்கம் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆயுஸ்மான் பவா பிரசாரம் குறித்து ஒவ்வொரு வாரமும் நடைமுறைப் படுத்தபடுகிறது. இதில் ரத்ததான முகாம்கள். உறுப்பு தானம் செய்வதற்கான ஊக்குவித்தல். அனைத்து சுகாதார நிலையங்கள் தூய்மை இயக்கம். ஆயுஸ் மேளா ஆகிய அனைத்து செயல் திட்டங்கள் ஆயுஸ்மான் பவா பிரசாரம் வாயிலாக நடத்தப்படுகிறது. இதன்படி நாளை (29ம் தேதி) திருக்குவளையில் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.