புதுக்கோட்டை, ஏப்.15:புதுக்கோட்டை தெற்கு 4ம் வீதி பெரிய மார்க்கெட் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் திருச்சபை சார்பில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கற்பக மகா கணபதியின் தேவ அணுக்கிரகத்தோடு ஆரம்பித்து சித்திரை தமிழ் புத்தாண்டு குரோதி ஆண்டின் பஞ்சாங்கம் பலன் படிக்கும் வைபவம் நடைபெற்றது பின்னர் மகாவிஷ்ணுவின் சிறப்பு அவதாரமாக விளங்கக்கூடிய தன்வந்திரி சம்ப்ரோக்ஷன பூர்வாங்க பூஜை, வாஸ்து பூஜையும் உலகின் முதல் மருத்துவம் என்று கருதக்கூடிய தன்வந்திரி மகாவிஷ்ணுவின் பூஜை சிறப்பாக நடைபெற்றது பின்னர் ஆலயத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கும் ஹயக்ரீவருக்கும் வராஹிஅம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.