வாழப்பாடி, டிச.1: பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டு திடலை, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநில மாநாட்டு திடலை, திமுகவின் முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு ஆய்வு செய்தார். அப்போது, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், சின்னதுரை, மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் ஜோயல், சீனிவாசன், மாவட்ட அவை தலைவர் கருணாநிதி, நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துலிங்கம், சோமசுந்தரம், சந்திரமோகன், ஒன்றிய செயலாளர்கள் அன்பு, மூர்த்தி, சிவராமன், சக்கரவர்த்தி, பேரூர் செயலாளர் வெங்கடேசன், செல்வம், பாபு, சுப்ரமணியன், மாவட்ட அமைப்பாளர்கள் திருநாவுக்கரசு, தனசேகரன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் மதியழகன், சிவராமன், பழனிசாமி, கலைச்செல்வன், பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராஜாமணி, மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணி, பேருர் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கினைப்பாளர் மகேஸ்வரன் உள்பட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.