திண்டுக்கல், செப். 26: திண்டுக்கல் நகர் பகுதியில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் உள்ளதாக மாநகராட்சிக்கு தகவல் கிடைத்தது. இதையத்து ஆணையர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் நேற்று மாநகர் நல அலுவலர் (பொறுப்பு) செபாஸ்டின் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள், தட்சிணாமூர்த்தி, தங்கவேல், செல்வராணி, கேசவன், பாலமுருகன், லாவண்யா, மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஏஎம்சி சாலை, பூ மார்க்கெட் பகுதிகளில் உள்ள டீ கடைகள், உணவகங்கள், மளிகை கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 70 கிலோவை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதித்தனர்.