திண்டுக்கல், மே 23: திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோயில் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர் முருகாம்பாள். இவரது வீட்டில் 200 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்று உள்ளது. இதில் நேற்று காலை 10 மணிக்கு பூனை தவறி உள்ளே விழுந்து 50 அடி ஆழத்தில் சிக்கி கொண்டது. இதுகுறித்து உடனே திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த மாவட்ட உதவி அலுவலர் சிவக்குமார் தலைமையிலான தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி வலை மூலமாக பூனையை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.