திட்டக்குடி, ஏப். 13: திட்டக்குடியை அடுத்துள்ள நாவலூர் பகுதியை சேர்ந்தவர் முத்துகருப்பன் மகன் பாண்டியன்(29). இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பழனிவேலுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு பாண்டியனும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனும் அப்பகுதியில் உள்ள ஓடை பாலத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அதே பகுதியில் பழனிவேல், சிவக்குமார் ஆகியோர் ஓடையின் அருகே நின்று பேசி கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் திடீரென இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பழனிவேல், பாண்டியன், மணிகண்டன் ஆகியோர் காயமடைந்தனர். இது குறித்து இருதரப்பினர் அளித்த தனித்தனி புகார்களின் பேரில், இரு தரப்பை சேர்ந்த 7 பேர் மீது ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டக்குடி அருகே
இருதரப்பினர் மோதல்
7 பேர் மீது வழக்கு பதிவு
previous post