வேலூர் நேஷ்னல் சர்க்கிள் அருகே தாறுமாறாக சென்று பூங்காவில் மோதி கார் விபத்துக்குள்ளானது. போதையில் வந்த 4 பேர் காயமடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் நேஷ்னல் சர்க்கிள் அருகே நேற்று மாலை காட்பாடியில் இருந்து வேலூர் நோக்கி சிகப்பு நிற கார் தாறுமாறாக வந்துகொண்டிருந்தது. இதனைப்பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது கார் திடீரென நேஷ்னல் சர்க்கிள் பகுதியில் உள்ள சிறிய பூங்காவிற்குள் புகுந்து அங்குள்ள டிஜிட்டல் கடிகாரத்தின் இரும்பு கம்பங்கள் மீது மோதி நின்றது. அதில் ஒருவர் போதையில் இருந்தபடியே காரில் இருந்து வெளிய வந்து. இதுபோல் 4 கார் நான் வாங்குவேன். கொண்டுபோ என்று கூறியபடி நின்றிருந்தார். பின்னர் அவ்வழியாக வந்த அவரது உறவினரின் பைக்கில் ஏறிச்சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் மற்ற 3 பேரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்ைசக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடத்திய விசாரணையில், காரில் இருந்தவர்கள் வேலூர் காகிதப்பட்டறையைச் சேர்ந்த தன்ராஜ், குமார் உட்பட 4 பேர் என்பது தெரியவந்தது. போலீசார், விபத்துக்குள்ளான காரை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். வேலூரில் விடுமுறை நாளான நேற்று குடிபோதையில் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.