Friday, May 10, 2024
Home » தாராவியில் ‘காஸ்’ சிலிண்டர் வெடிப்பு: குழந்தைகள் உட்பட 17 பேருக்கு தீக்காயம்

தாராவியில் ‘காஸ்’ சிலிண்டர் வெடிப்பு: குழந்தைகள் உட்பட 17 பேருக்கு தீக்காயம்

by kannappan

மும்பை: மும்பையின் தாராவியில் காஸ் சிலிண்டர் வெடித்ததில், குழந்தைகள் உட்பட 17 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் தலைநகர் மும்பையின் தாராவி பகுதியில் உள்ள ஷாஹு நகரின் குடிசையில் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்த தீவிபத்தில், 17 பேர் காயமடைந்தனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், ‘ஷாஹு நகர் பகுதியில் உள்ள குடிசைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த சமையல் காஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது. அதனால், அப்பகுதியில் இருந்த பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினோம். படுகாயமடைந்த 17 பேரை மீட்டு சியோன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவர்களின் உடலில் 60 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் உள்ளதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்றனர்….

You may also like

Leave a Comment

four × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi