Tuesday, June 11, 2024
Home » தாஜ்மஹால் இருந்த இடத்தில் சிவன் கோவில் இருந்தது.. தாஜ்மஹால் பெயர் ராம் மஹால் என மாற்றம் செய்யப்படும் : உ.பி.பாஜக எம்.எல்.ஏ. கிளப்பிய சர்ச்சை!!

தாஜ்மஹால் இருந்த இடத்தில் சிவன் கோவில் இருந்தது.. தாஜ்மஹால் பெயர் ராம் மஹால் என மாற்றம் செய்யப்படும் : உ.பி.பாஜக எம்.எல்.ஏ. கிளப்பிய சர்ச்சை!!

by kannappan

லக்னோ : தாஜ் மஹால் பெயர் ராம் மஹால் என விரைவில் மாற்றம் செய்யப்படும் என உத்தரப் பிரதேச பாஜக எம்எல்ஏ கூறியிருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. உலகிலுள்ள ஏழு அதிசய சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தாஜ்மஹால் முகாலயப்பேரரசர் ஷாஜஹான் அவர்களால் அவரது அழகிய மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக கட்டப்பட்டுள்ள இது கல்லறை மாளிகையாகும்.1632ம் ஆண்டில் துவங்கப்பட்ட இதன் கட்டுமானத்தை முடிப்பதற்கு 21 ஆண்டுகள் தேவைப்பட்டன என்பது அனைவரும் தெரிந்த ஒன்றே. இந்த நிலையில் உலகப் புகழ் பெற்ற ‘தாஜ்மஹால்’ நினைவுச்சின்னத்தின் பெயர் ராம் மஹால் என்று மாற்றம் செய்யப்படும் என பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் உள்ள பைரியா தொகுதியைச் சேர்ந்தவர் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. சுரேந்திர சிங். இவர் அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ‘ஆக்ராவின் தாஜ்மஹால், ஒருகாலத்தில் சிவபெருமானின் ஆலயமாக இருந்தது. எனவே, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் தாஜ் மஹால் ராம் மஹால் என்று பெயர் மாற்றப்படும்,’ என உறுதி அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சிவாஜியின் வழித்தோன்றல் ஆவார் என்று புகழாரம் சூட்டினார். ‘சிவாஜியின் வழித்தோன்றல்கள் உத்தரபிரதேச தேசத்திற்கு வந்துள்ளனர். சமர்த் குரு ராம்தாஸ் சிவாஜியை இந்தியாவுக்குக் கொடுத்தது போலவே, கோரக்நாத் ஜி, யோகி ஆதித்யநாத்தை உத்தரபிரதேசத்திற்கு வழங்கியுள்ளார்’ என்று சிங் குறிப்பிட்டுள்ளார். இவரின் கருத்துக்கு மீண்டும் சர்ச்சை கிளம்பியதோடு, எதிர்கட்சியினர் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.இவர் இதற்கு முன்னரும்கூட பலமுறை பல்வேறு சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.முன்னதாக, ‘இந்தியாவில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் பல வரலாற்று சின்னங்கள், சாலைகள் ஆகியவற்றின் பெயர்களை மாற்ற வேண்டும். அவை இன்னமும் முகலாய மன்னர்களின் பெயர்களில் வழங்கப்படக் கூடாது. அந்த வகையில் தாஜ்மஹாலின் பெயரை ராம் மஹால் அல்லது சிவாஜி மஹால் கிருஷ்ணர் மஹால் அல்லது என்று மாற்ற வேண்டும்’ என்று கூறி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது….

You may also like

Leave a Comment

thirteen + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi